search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிரியார் பலி"

    கருங்கல் அருகே மோட்டார்சைக்கிள் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் பாதிரியார் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பொட்டக்குழியைச் சேர்ந்தவர் பென்னட் ஜோசப் ராஜ் (வயது 39). இவர் திரிபுராவில் பாதிரியாராக பணியாற்றி வந்தார்.

    தற்போது கண்டன் விளையில் உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனை பணிக்காக வந்திருந்தார். நேற்று இரவு அவர் தெருவுக்கடையில் நடந்த தனது உறவினர் திருமண விழாவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் கண்டன்விளை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

    பாலூர் அருகே தாளையங்கோட்டை பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பென்னட் ஜோசப்ராஜீன் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பென்னட் ஜோசப் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் பாதிரியாரின் சகோதரர் கிறிஸ்துராஜ் புகார் செய்தார். போலீசார் பலியான பென்னட் ஜோசப்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பென்னட் ஜோசப்ராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது, அதை ஓட்டிச் சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இதற்காக விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews

    ×